Sunday, April 10, 2011

தமிழகத்தில் மற்றொரு சுதந்திரப் போராட்டம் அதிமுக பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா


தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் மற்றொரு சுதந்திரப் போராட்டம் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா கூறினார்.

ஒரு குடும்ப ஆதிக்கத்திலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்றும்
தமிழகத்தைக் காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன் மக்களைச் சந்திக்க வந்துள்ளேன். 

 கருணாநிதி மற்றும் திமுகவைச் சேர்ந்த ஒரு சில தலைவர்கள் தமிழகத்தை சூறையாடி, உலகப் பணக்காரர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளனர். இக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.  

கடும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, ரெüடிகள் ராஜ்யம், மணல் கொள்ளை, ஊழல், எந்தத் தொழிலையும், எங்கும், யாரும் செய்ய முடியாத வகையில் அக்கிரமம், அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கள்ள லாட்டரி என சமூக அக்கிரமிங்களுக்கிடையே சிக்கித் தவிக்கும் தமிழகத்தை மீட்கப்போவது எப்போது? என நல்லோரின் மனசாட்சி கேட்கிறது. 

 ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் செய்தவர்களுக்குத் தமிழக மக்கள் தண்டனை கொடுக்கப்போவது எப்போது? என நாடே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

எங்கும், எதிலும் ஊழல் என்ற சாம்ராஜ்யத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிக்க வேண்டியதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது இத் தேர்தல். 

 தமிழகத்தைப் பொருளாதார வளர்ச்சி மிக்க மாநிலமாக மாற்றவும், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு மிக்க மாநிலமாக மாற்றவும் திமுக ஆட்சியால் முடியாது. எங்களால் முடியும். 

 தமிழக மக்களை 1 லட்சம் கோடி கடனாளியாக்கியதுதான் திமுக ஆட்சியின் சாதனை. மக்கள் பணத்தைச் சுரண்டி பணக்காரர்களாக வேண்டும் என்ற பேராசை பிடித்த கும்பலிடமிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும்.  

இலவசமாக வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்குவதாக ரூ.2 ஆயிரம் மதிப்பில் தொலைக்காட்சிப் பெட்டியை வழங்கிவிட்டு, ஆண்டுக்கு ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஆயிரம் ரூபாயை கேபிள் கட்டணமாக வசூலித்துவிடுகின்றனர். கருணாநிதியின் சூழ்ச்சி, தந்திரங்கள் நிறைந்த இதுபோன்ற திட்டங்களே கடந்த 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன.  

வெள்ளைக்காரர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற சுதந்திரப் போராட்டம் நடத்தியதைப் போன்று, கொள்ளைக்காரர்களிடம் இருந்து தமிழகத்தைக் காக்க மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டம் என்பதே வரும் சட்டப் பேரவைத் தேர்தல். 

மத்தியில் அமைச்சர் பதவியையும், மாநிலத்தில் ஆட்சியையும் வைத்துக் கொண்டு வேறு எங்கும் காணமுடியாத ஊழலைப் புரிந்து அதிசயக்க வைத்துள்ளனர். 

 பிகார், குஜராத், பஞ்சாப் மாநில வளர்ச்சி நிலைகளோடு ஒப்பிடுகையில் தமிழகம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

 முதல்வர் கருணாநிதி தன் குடும்பத்தின் வளர்ச்சிக்காகவே ஆட்சி நடத்தியதே இதற்குக் காரணம்.  கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்கும் அளவுக்கு ஊழலில் சாதனை படைத்துள்ள திமுக-வை, 234 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கச் செய்து தமிழக மக்கள் கின்னஸ் சாதனை படைக்க வேண்டும். 

தமிழக மக்களின் உழைப்பை சுரண்டியதற்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.  பணநாயகத்தால், ஜனநாயகத்தை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார் 

கருணாநிதி. தமிழகத்தை தன் குடும்ப வசமாக்க நினைக்கும் கருணாநிதியை, குடும்பத்தோடு அப்புறப்படுத்த வேண்டும்.  

கயவர்களிடமிருந்து தமிழகத்தைக் காப்பாற்ற, மக்கள் வளமான வாழ்வு பெற, தமிழகம் முதன்மை மாநிலமாக மாற அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

 தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில்அ இஅதிமுக பொதுசெயலாளர் ஜெ. ஜெயலலிதா பேசியது:

No comments:

Post a Comment